நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 27
புன்னெறி யதனிற் செல்லும்
போக்கினை விலக்கி மேலா
நன்னெறி ஒழுகச் செய்து
நவையறு காட்சி நல்கி
என்னையும் அடியனாக்கி
இருவினை நீக்கி யாண்ட
பன்னிரு தடந்தோள் வள்ளல்
தெய்வயானைக் கொழுநனை வணங்கிய பின் பூமகள் சந்நிதிக்கு வருகின்றோம். அவளை,
மாதவன் சக்தியினைச் செய்ய
மலைவளர் மணியினை வாழ்த்திடுவோ
போதுமிவ் வறுமையெலாம்-எந்தப்
போதிலும் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும்-உயர்
வேதமும் வெறுப்புறச் சோரர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை-அன்னை
மாமகள் அடியினை சரண்புகுவோம்.
நாரணன் மார்பினிலே-அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பக்தரிலும்-பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்
வீரர்தம் தோளினிலும் உடல்
வியர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் ஒளி
பரவிட வீற்றிருந் தருள்புரிவாள்
- பாரதியார், தோ, பா, திருமகளைச் சரணம்
என்ற பாடல்களில் பெரிய பிராட்டியாரைச் சரண் புகுதல் சாற்றப்படுகின்றது. இப்பாடல்கள் திருமகளின் நிலை தீட்டப்பெறுவதைச் சிந்திக்கச் செய்கின்றது. திருமகள் புருஷகாரபூதை (தகவுரை வழங்குபவள்) மட்டும் அல்லள்; தானே தனித்தியங்கும் அதிகாரத்தையும் பெற்றவள் (வடகலை) என்பதையும் எண்ணச் செய்கின்றன.