பக்கம்:என் சுயசரிதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

வந்தேன். ஆயினும் சிலகாலம் பொறுத்தே என் மனதைத் தேற்றிக்கொள்ள சக்தி பெற்றேன். அவைகளையெல்லாம் பற்றி இதைப் படிக்கும் எனது நண்பர்களுக்கு எழுதுவானேன்? இச் சந்தர்ப்பத்தில் ஒரு ஆங்கில கவி எழுதிய இரண்டு அடிகள் ஞாபகம் வருகிறது. அதன் மொழி பெயர்ப்பை எழுதுகிறேன். “சிரித்தையேல் உலகெல்லாம் சிரித்திடும் உன்னுடன், அழுதையேல் நீதான் தனியாக அழவேண்டும்” அன்று முதல் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன். அது என் சந்தோஷத்தை உலகுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். என்னுள்ளே என் துயரத்தை அடக்கிக்கொள்ள வேண்டும் என்பதாம்.

என் தந்தையின் தேக அசௌக்கியத்தின் காரணத்தினாலோ அல்லது அப்பொழுது சுகுணவிலாச சபைக்காக தமிழ் நாடகங்களை எழுதி அவைகளில் நடித்த காரணத்தினாலோ நான் லா புஸ்தகங்களை சரியாகப் படிக்கவில்லை. இவ்வருஷம் முதல் லா பரிட்சைக்கு (First Examination in Law) போனபோது நான் தேறுவேனோ என்னவோ என்று சந்தேகப் பட்டேன். ஆயினும் தெய்வாதீனத்தால் அதில் தேறினேன்.

1896-ஆம் வருஷம் கடைசியில் டிசம்பர் மாதம் பரிட்சையில் நாலும் ஸ்ரீனிவாச ஐயங்காரும் தேறினோம். அந்த பரிட்சைக்காக நாங்களிருவரும் ஒன்றாய் படித்தோம் எங்கள் லா புஸ்தகங்களை.

1897-ஆம் வருஷம் லா பரிட்சையில் தேறி நாங்களிருவரும் ஹைகோர்ட்டில் அப்ரென்டிசராக சேர்ந்தோம். ஸ்ரீனிவாச ஐயங்கார் ஜேம்ஸ் ஷார்ட்ஸ் (James Sharts) என்பவரிடம் அப்பியாசகராகச் சேர்ந்தார். நான் ஸ்மாஸ்கோர்ட் ஜட்ஜாயிருந்து பெயர் பெற்ற ரங்கநாத சாஸ்திரியாரின் குமாரரான சுந்தரம் சாஸ்திரியாரிடம் அப்பியாசகனாகச் சேர்ந்தேன். என் தமையனாராகிய, அச்சமயம் ஹைகோர்ட் வக்கீலாக நடவடிக்கை நடத்திக்கொண்டிருந்த ஐயாசாமி முதலியாரின் அபிப்ராயப்படி என் துர் அதிர்ஷ்டத்தினால் சுந்தரம் சாஸ்திரியார் 4 மாதத்திற்குள்ளாக தேகவியோகமாக அவரது குமாரர் பிறகு ஹைகோர்ட் ஜட்ஜாகிய குமாரசாமி சாஸ்திரியாரிடம் அப்பியாசகனாக அமர்ந்தேன். 1897-ஆம் வருஷம் முழுவதும் ஏறக்குறைய ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானும் வெவ்வேறு உபாத்தியாயர்களிடம் கோர்ட்டில் நிர்வகிக்கவேண்டிய விஷயங்களைக் கற்க வேண்டியவர்களாய் இருந்தபோதிலும் இருவரும் ஒன்றாய் சேர்ந்து கோர்ட்டுக்களைச் சுற்றி, பேசிக் கொண்டு வேடிக்கையாய் காலங்கழிப்போம். ஒவ்வொரு நாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/30&oldid=1123267" இலிருந்து மீள்விக்கப்பட்டது