பக்கம்:என் தந்தை தாயர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[காட்சி-4]

ஏமாந்த இரண்டு திருடர்கள்

9


வுட்டு அங்கே போயி தூங்கிவுட்டு சாயங்காலமாக நான் வந்தாப்போலே வந்தூடு. பலே.அப்போ-அண்ணா, உங்களுக்கு மூணுவேளெ கஞ்சி கெடைச்சுது ! பக்.இல்லாதே என்ன !-- அல்லாம் நம்பளா நடந்து கிரத்துலே இருக்குது. ஆனா ஒண்ணு சொல்றேன் கேளு. அந்த பழயது போடும்போது, கெழத்துக்கிட்ட நல்ல நாரத்துங்கா ஊறுகா இருக்குது-பலே ஷோக்காயிருக்கும் -அந்த பழயதுக்கும் - அதுக்கும் அதுலெ ரெண்டு பத்தே கொடுக்கச் சொல்லு.

பலே.அப்படியே ஆவட்டும் அண்ணா இப்போ நம்போ தூங்கலாம் அண்ணா-அண்ணா, தூக்கம் வராப்போன - இந்தக்கெழத்துக்கிட்ட இருக்கர சொத்தே தபாய்ச் சிகினு போவரத்துக்கு என்னமான வழி யோசனே பண்ணுங்கண்ணா.

பக். ஆமாம்-உம்-நீயும் யோசனே பண்ணிபாரு.

[இருவரும் திண்ணைகளில் படுத்துக் கொள்கின்றனர்.]

காட்சி முடிகிறது.

நான்காம் காட்சி

இடம்-களத்தூர் ஏரிக்கடுத்த மேய்ப்பு நிலம்.

காலம்-பகல்

அப்பாசாமி முதலியார்மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவருகிறது. அதன் பின்னால் பக்கா திருடன், தலையில் ஒரு பாயையும் தலையணையையும் சுமந்து கொண்டு வியர்க்க வியர்க்க ஒடி வருகிறான்.

பக். [பாயையும் தலையணையையும் கீழே தொப்பென்று போட்டு] அப்பாடா! இனிமேலே இந்த பிசாசி பிடிச்ச மாட்டுக்குப் பின்னாலே என்னலே ஒடி முடியாதுடாயப்பா !- அந்த திருட்டுப் பய நம்மெ ஏமாத்தி விட்டான்! தான் கஷ்டப் பட்டது போதாதிண்ணு, நம் மெ ஒரு பாயும் தலையாணியும் தூக்கி கினு ஒட வைச்சான் !- அந்தப் பயலே சாயந்திரம் என்ன செய்ரேன்

2