பக்கம்:என் தந்தை தாயர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஏமாந்த இரண்டு திருடர்கள் (அங்கம்-1

பலே.அதாம் அண்ணே, யோசிச்சி பாக்ரேன்-ஒரு வழியை யும் காணோம் ! அந்த கூரெ ஒட்டெ பிரிச்சிபாத்த சமாசாரம் என்ன மாவோ-

பக்.அடெ அதோ வருதுடா கெழம் கப்சப் ! அப்பாசாமி முதலியார் உள்ளேயிருந்து வருகிறார்,

அ.ஏண்டாப்பா-தூங்கி விட்டைங்களா ? இருவரும். இல்லைங்கோ-முழிச்சிகினு தாம் இருக்கரோம்.

அ.சந்தோஷம்-|திண்ணை மீது உட்காருகிறார்; இருவரும் எழுந்து நிற்கிறார்கள். உங்களே நான் ஒரு யோசனை கேக்கலா மிண்ணு வந்தேன்-இந்த ஊர்லே திருடர் காபுரா பெரிசா போச்சி!- அண்ணெக்கி என்னண்ணா --செவுத்துங் கீழே தோண்டி பாத்தாங்க-இப்பொ என்னுண்ணா கூரெ ஒட்டே பிரிச்சிப் பாத்திருக்காங்க! -அந்த பொட்டியே எப்படி பத்திரப் படுத்தரது இண்ணு பாக்கரேன்-நீங்க என்னாமானாலும் யோசனே சொல்லுங்க பார்க்கலாம்.

பக்.அந்த பெட்டியும்-பக்கத்துலே-நாங்க ரெண்டு பேரும்-ராத்திரியிலே படுத்துகிறோம்-ஒருத்தர் மாத்தி ஒருத்தர் முழிச்சிகினு இருந்து காவலிருக்கரோம் எவனுவது திருடன் கிட்ட வந்தா

பலே.மண்டையே உடைச்சூடரோம் !அ.ஆம்- அது ஒரு நல்ல யோசனேதாம்-எனக்கென்ன தோணுது-அந்த பெட்டியே மொள்ளமா-அதோ அந்த கெணத்துலே எறக்கி விடலாம். கெணத்துப் பக்கத்துலே நீங்க ரெண்டுபேரும் காவலா படுத்துக் குங்க-நானும் காலமே பொழுது விடிஞ்சவுடனே வேறெ எங்கேயாவது கொண்டு போய் வைச்சூட ரேன், -

பக் அப்படியே செய்யுங்கொ.

பலே.நீங்க ஒண்னும் பயப்படாதைங்கோ, அந்த பொட் டிக்கி காங்க உத்தரவாதங்கோ. (அப்பாசாமி முதலியார் உள்ளே போகிறார். இரண்டு திருடர்களும் குசுகுசு என்று பேசிக்கொள் கின்றனர்).