பக்கம்:என் தந்தை தாயர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

ஏமாந்த இரண்டு திருடர்கள்

[அங்கம்-1]


பக். இந்த ஊர்லே யிருக்கிற - நம்ப தொழிலாளிங்க கிட்ட இருந்து-கத்துக வெண்டியதெல்லாம் கத்துகுனாச்சா?


பலே. என்ன இங்கே யிருக்கவங்க கிட்ட இருந்து கத்துகிறது? நான் வந்ததுமொதல் 12 சவரன் இடுப்பிலே சொருகிகினு இருக்கறேன். அத்தெ ஒருத்தனாவது தொட்டவனெ காணோம் ! எங்க ஊர்லே இடுப்புலே சவரனெ சொருகிகினு - பக்கத்துக் கடைக்கி போயி எரி மூட்டை வாங்கிகினு வர்ரத்துக்குள்ளோ-அது மாயமா போயிருக்கும். என்ன பிரயோஜனம் ? இந்த ஊர்லே ஒருத்தனாவது கெட்டிக்காரத் திருடனா காணோம் ! பேர் மாத்திரம் திருட்டிலே பேர் போனது தெப்ப கொளத்தூரு ! - இந்த ஊரு சாமி பேரு கூட திருட்டீஸ்வரனாம் !


பக். அப்படி சும்மா சொல்லிவிடாதே தம்பி! நீ இடுப்புலே சொருகிகினு இருக்கரது நெஜமான சவரனாயிருந்தா நீ இங்கே வந்தநாளே காணாமே போயிருக்கும்-இந்த ஊரிலே இருக்கிற திருடருங்கல்லாம், பித்தளெ சவரனெ திருடர தில்லே - பொன் சவரனாயிருந்த தான் திருடுவாங்க - கக்கூஸ்லே போய் கன்னம் வைப்பானேன். அப்பா ?


பலே. அண்ணா! -இது உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது அண்ணா? எப்போ தெரிஞ்சுது அண்ணா!-


பக். உன் இடுப்புலே இருக்கிற சவரன் முடிச்செ எடுத்துப்பாரும் தெரியும்.


பலே. (அதை அவிழ்த்துப் பார்த்து) இதென்ன காயிதம் ஒண்னு இதிலே இருக்குதே !


பக். அத்தெ படிச்சிபாரு தெரியும்.


பலே.(அதைப் பிரித்து வாசிக்கிறான்) “தம்பி பலே திருடனுக்கு - இந்த ஊரில் இருப்பவர்களெல்லாம் பித்தளையென்றும், பொன்னென்றும் தொட்டுப் பார்த்த மாத்திரத்தில் தெரிந்து கொள்வார்கள். அத்தொட்டு இன்னொருதரம் வரும்போது, பொன் சவரனைக் கொண்டு வா, நீ முழிச்சு கினு இருக்கும் போதே, அதை திரு