பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

என் தமிழ்ப்பணி

பெற்ற நாடாகவும் திகழ்தல் வேண்டும்; வாணிகத்திலும், நில வாணிகத்தைக் காட்டிலும், கடல் வாணிகத்தையே பெரிவாரியாக மேற்கொள்ளுதல் வேண்டும்; விலையுயர்ந்த பொருள்களை வெளிநாடுகளிலிருந்து தான் வாங்குவதை விடுத்து, அப்பொருள்களை அப்புறநாடுகளுக்குக் கடன் வழங்குதல் வேண்டும்; பொருள்களை விற்றுப் பொற்காசுகளைப் பெற வேண்டுமேயல்லது, பொற்காசுகளைக் கொடுத்துப் பொருள்களை வாங்குதல் கூடாது: அத்தகைய வாணிகத்திற்குத் துணை செய்யும் வகையில், நாட்டை வகைவகையான தொழில்களை வளர்த்து வளம் பெருக்கும் நாடாக ஆக்குதல் வேண்டும்; தன் நாட்டுத் தொழில் துறை பிற நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து, அவர்கள் விரும்பி வாங்கும் வகையில், பொருள்களை வனப்புடையவாக ஆக்கித் தருதல் வேண்டும், என்பன போலும் வாணிகத் துறை உண்மைகளை உணர்ந்திருந்தமையாக, தமிழகத்துப் பேரூர்கள் பெரும் பொருட்களஞ்சியங்களாகக் காட்சி அளித்தன.

இவ்வாறு, தமிழகத்துப் பேரூர்களில் வளம் கொழிக்கவே, அப்பேரூர்களை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்ட அரசர்கள், வளங்கொழிக்கும் நாடுகளுள் புகுந்து, அவ்வளங்களைக் கொள்ளை கொண்டு செல்வதையே வாழ்வுத் தொழிலாகக் கொண்டு திரியும் ஆறலைக் கள்வர்களாலும், மண்ணாசை மிக்க மன்னர்களாலும், பொன்னாசை மிக்க, பெரு வீரர்களாலும், அழிவு நேராவாறு அந்நகர்களைக் காக்க வேண்டும் என்பதில் கருத்துடையராயினர்.

அதனால், அப்பேரூர்களைச் சூழவலிய பெரிய அரண்களை அமைக்க வேண்டுவது இன்றியமையாததாகி விட்டது. ஒப்பற்ற பேரரசு அமைத்து ஆண்டு வந்தசோழர் குலக் காவலர்கள், தங்கள் நாடு தந்த பெருநிதியை ஈட்டி வைத்