பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா.கோவிந்தனார்

137

16. “கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதில் காட்சி நன்நிறம் பெற்று
வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றம்”

சிலம்பு : 5:118-121

17. வஞ்சம் உண்டு மயற்பகை உற்றோர்,
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்:
அமுல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்.
கழல் கண் கூளிக் கடுநவைப் பட்டோர்
சுழல வந்து தொழத் துயர்நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றம்”

சிலம்பு : 5:122-127

18. “தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்,
அவம் மறைத்து ஒழுகும் அலவற் பெண்டிர்,
அறைபோகு அமைச்சர், பிறர் மனை நயப்போர்
பொய்க் கரியாளர், புறங் கூற்றாளர் என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூதசதுக்கம்”

சிலம்பு : 5:128-134

19. “அரைசு கோல் கோடினும், அறம்கூறு அவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது, நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுடம் பாவை மன்றம்”

சிலம்பு : 5:135-138

20. “கடலொடு காவிரி சென்றலைக்கும் முன்றில்
மடல் அவிழ் நெய்தலங்கானல் தடம்உள

என்-9