பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

என் தமிழ்ப்பணி

சோம குண்டம், சூரிய குண்டம், துறைமுழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியிலும் போய்ப் பிறப்பர்”

-சிலம்பு ; 9 : 57-62

21. “உயர் கோட்டத்து.
முருகு அமர்பூ முரன்கிடக்கை
வரியணி சுடர் வான் பொய்கை
இருகாமத்து இனை ஏரி”

பட்டினப் பாலை :36-39

“மலய மாருதம் மன்னர்க்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன் மரப்பந்தர்
இலவந்திகை”

சிலம்பு :10; 29-31

22. “இலவந்திகையின் எயிற்புறம் போகின்,
உலக மன்னவன் உழையோர் ஆங்குளர்.

மணி : 3:45-46

“உவவனம் என்பது ஒன்று உண்டு; அதன் உள்ளது
விளிப்பு அறை போகாது, மெய்புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு; அதன் உள்ளது
தூநிற மாமணிச் சுட்ரொளி விரிந்த
தாமரைப் பீடிகை தாமுண்டு; ஆங்கு இடில்
அரும்பு அவிழ்செய்யும்; மலர்ந்தன வாடா;
சுரும்பினம் மூசா”

மணி : 3; 62-68

23. மணி :3:49-53