பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

புலவர் கா. கோவிந்தனார்

கவியரசு ஆர் வெங்கடாசலம் பிள்ளை அவர்கள், இராகவன் தேர்வில் நன்றாக எழுதியுள்ளார். எனக் கூறினார். அது கேட்ட ஒளவை அவர்கள் என்னைச் சுட்டிக் காட்டி, “இவன் அவனைவிடத் தெளிவாகப் படித்தவன்?” என்று கூறிச் சென்று விட்டார்.

கவியரசு அவர்கள் என்னை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டு, இலக்கியத்திலும், இலக்கணத்திலுமாகச் சில கேள்விகளைக் கேட்டார். கூடுமானவரை நல்ல விடையே கூறினேன். என் அறிவு எனக்குத் தானே தெரியும். மேலும் அவர் கேட்டால் விழிக்க வேண்டி நேரும். ஆசிரியர் நற்சான்றிற்கு மாசு நேரக் கூடும் என்பதால் கவியரானா விட்டு ஒடி விடத் திட்டமிட்டு அவரிடம் ஓர் ஐயம் எழுப்பினேன். “தொல்காப்பியர் எழுவாய் வேற்றுமைக்கு இலக்கணம் கூறும்போது எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே” என்றார். அதாவது சொல் எவ்விதத் திரியும் இல்லாமல் இருப்பது. அவ்வாறு கூறிய அவரே ‘நீயீர்’ என்ற எழுவாய்ச் சொல்லுக்கு இலக்கணம் கூறும்போது “நும்மின் திரிபெயர்” என்று கூறியுள்ளார். இது முன் கூறிய இலக்கணத்திற்கு முரண் ஆகாதா? நும்மின் திரி, பெயராகிய நீயீர் என்பது பிற வேற்றுமைகளை ஏற்கும்போது மீண்டும் நும், எனத் திரிந்து, “தும்மை நும்மால்” என ஆவானேன் என்ற இரு ஐயங்களை எழுப்பினேன். அவ்ர் சிந்திக்கத் தொடங்கி விட்டார். விட்டால் போதும் எனஓடி விட்டேன்.

பள்ளியில் மற்றொரு தமிழாசிரியர் திரு. பாலசுந்தர நாயகர் அவர்கள் வித்துவான் தேர்வில் வெற்றி பெற்றார். அதற்கு ஒரு பாராட்டு விழா நடத்த தலைமை ஆசிரியரின் அனுமதி கேட்டோம். அவர் மறுத்து விட்டார். பானுகவி மாணவர் கழகமும் விழா நடத்த முன் வரவில்லை. அதனால் ஒளவைத் தமிழ் மாணவர் கழகம் என்ற புதிய கழகத்தைத் தெர்டங்கி அவருக்கு மிகப் பெரிய பாராட்டு விழாவினை நடத்தினோம்.