பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

31



15. பருந்து இளைப்படூஉம் பாறுதலை ஒமை
இருங்கல் விடரகத்து ஈன்று இளைப்பட்ட
மெல புனிற்று அம்பினவு பசித்தெனப், பைங்கண்
செந்நாய் ஏற்றை, கேழல் தாக்க,
இரியல் பிணவல் தீண்டலின், பரீஇச்

20. செங்காய் உதிர்ந்த பைங்குலை ஈந்தின்
பரல்மண் சுவலமுரண் நிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சிக் கூழ் ஆர் கூவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்
வெண்கோடு நயந்த அன்புஇல் கானவர்

25. இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழிசெத்து
இருங்களிற்று இனதிரை தூர்க்கும்
பெருங்கல் அத்தம் விவங்கிய காடே.”

தினை : பாலை

துறை : பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், இடைவழியில் மீளக் கருதிய நெஞ்சைக் கழறியது.

புலவர் : காவன் முல்லைப் பூதனார்.

1. மெளவல்-முல்லை; வான்-வெள்ளிய; முகை-
அரும்பு.

2. மாவீழ்-வண்டுகள் விரும்பும்;

3. அவ்-அழகிய, கைஇ-பின்னப்பெற்று

6. ஒல்லாய்-கேட்டு அதன்படி நடவாமல்.

7. ஆயின்-ஆராய்ந்தால்: மனைநக-மனைவி மகிழ்

9. இணர்-பூங்கொத்து

10. சினை-கிளை. புலம்ப-வருந்த; வல்லோன்-மலர்
பறிப்போன்