பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பதிப்புரை


இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில், நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப்
படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, என
பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கி
யவர்,


புலவர் கா. கோவிந்தனார் அவர்கள்


“தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அர்ப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பெற்ற பேறு பெற்றவர்,
பைந்தமிழ்ப் புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ்
ஏடுகளிலெல்லாம் திளைத்து, வரலாற்றுக் கண்
கொண்டு ஆய்ந்து, தொல்காலத் தமிழர் வாழ்வை
இக்காலத்தவரும் தெளிந்திடுமாறு தேன்தமிழ்ச்
சுவடிகளாக வரைந்து வழங்கிய பெருமை
உடையவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_தமிழ்ப்பணி.pdf/5&oldid=1011194" இலிருந்து மீள்விக்கப்பட்டது