பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8. திருமுருகாற்றுப்படை

அறிமுகம்

திருமுருகாற்றுப் படை, வீடுபேறு அடைதற்கு உரிய நல்லூழ் உடையான் ஒருவனை, அவ்வீடு பேற்றினை பெற்றான் ஒருவன், முருகக் கடவுளிடத்தே செல்க: சென்றால் வீடுபேறு பெறுகுவை” என வழி கூறியதாகப் பாடப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் வரும் பொருநராற்றுப்படை முதலியன எல்லாம், பொருளைப் பெறுவோர் பெயரால் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை பொருள் தரும் தலைவன் பெயரால் வழங்கும் சிறப்புடையது. இதற்குப் புலவரர்ற்றுப்படை என்றோர் பெயரும் இருந்தது என்பது, “இதனைப் புலவராற்றுப்படை என்று உயர்ந்து உணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை என்னும் பெயரன்றி அப்பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை என்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமை மறுக்க” (முருகு : 295 : உரை) என்னும் நச்சினார்க்கினியர் உரையால் தெளிவாகும்.

தெய்வ யானையின் கணவன்.

நீல வண்ண நீர் நிறைந்த கடலில், காலைப் போதில் அடிவானத்தில். செந்தழல் பிழம்பாய் செந்நெருப் புருண்டையாய் ஞாயிறு தோன்ற, அதன் செவ்வண்ணக் கதிர்கள் வரிசை வரிசையாக அதைச் சுற்றி எழும் காட்சி கண்ணுக்கு விருந்தளிக்கும் கவின்மிகு காட்சியாகும்.