பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

என் தமிழ்ப்பணி

விளக்கவுரை : நூல்கள், மங்கல மொழிகளில் ஒன்றான “உலகம்” என்ற சொல்லைத் தனித்தேனும் அடை எடுத்தேனும். உலகம் எனப் பொருள்படும் சொற்கள் தனித்தேனும் அடை எடுத்தேனும் தொடங்கப்படுதல் வேண்டும் என்பது மரபு,

“உலகம் திரியா ஓங்கு உயர் விழுச்சீர்” (மணி: 1:1)
“உலகெலாம் உணர்ந்து” (பெரிய புராணம் ; கடவுள் வாழ்த்து)

“உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்” (கம்பராமாயணம் : கடவுள் வாழ்த்து)

இவற்றில் “உலகம்” என்று தனித்தே முதற்கண் வந்துளது.

நளந்தலை உலகம்” வளைஇ (முல்லைப்பாட்டு ;1)

“மூவா முதலா உலகம் (சீவக சிந்தாமணி , 1)

“நீடாழி உலகம்” (வில்லி பாரதம் : கடவுள் வாழ்த்து)

இவற்றில் “உலகம்” என்ற சொல் அடையடுத்து வந்துளது.

“வையகம் பனிப்ப” (நெடுநல்வாடை : 1) இதில் உலகம் எனும் பொருள்படும் சொல் தனித்து முதற்கண் வந்துள்ளது.

“மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை!’ (சிறு பாணாற்றுப்படை : 1) “மாநிலம் சேவடியாக” (நற்றிணை கடவுள் வாழ்த்து) இவற்றில் உலகம் எனும் பொருள்களை உடைய நிலமடந்தை) நிலம், என்ற சொற்கள் அடையடுத்து வந்துள்ளன.