பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

71


இன்பத்தை அளிக்க வேண்டும்; அறவழி வரவேண்டும் என்றெல்லாம் அறநூல்கள் கூறுகின்றன. ஆனால் இவரோ தன் பொருள் வேட்கையால் என் இன்பத்தை அழித்துவிட்டார். அளித்த வாக்குப் பிழைத்துப் போக அறநெறி யினின்றும் பிறழ்ந்து விட்டார். அறம் கெடினும் கெடுக இன்பம் கெடினும் கெடுக என்ற கருத்துடையவராய் நின்று அவர் பொருளிட்டத் துணிந்து விட்டார். தோழி! அப் பொருள் அத்துணைச் சிறப்புடையதோ?” எனக் கூறி வருந்தினாள்.

“மண்கண் குளிர்ப்பவீசி, தண்பெயல்
பாடு உலந்தன்றே பறைக்குரல் எழிலி:
புதன் மிசைத் தளவின் இதமுள் செந்நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழக்

5. காடே கம்மென்றன்றே; அவல
கோடு உடைந்தன்ன கோடல் பைம்பயிர்ப்
பதவின பாவை முனை இ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழிஇத்
தண்அறல் பருகித் தாழ்ந்து பட்டனவே:

10. அனைய கொல்? வாழி தோழி! மனைய
தாழ்வில் நொச்சி சூழ்வன மலரும்
மெளவல் மாச்சினை காட்டி
அவ்வளவு என்றார் ஆண்டுச் செய்பொருளே.”

திணை : பாலை

துறை : தலைமகன் பொருள்வயின் பிரிந்தானாகத்
தலைவி தோழிக்குச் சொல்லியது.

புலவர்: ஒரோடோகத்துக் சுந்தரத்தனார்.

1. மண்கண்-மண்ணிடம்