பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

127


ஒன்றாகவா... ஒன்றாக்கியா
ஒரு
அலசல்...


எனது நூல் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு கலைஞருடன் ஒரு மேடையை பகிர்ந்துக் கொள்ளும் இனிய அனுபவம் ஒன்று அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நிகழ்ந்தது.

கலைஞர் 26796அன்று எனது நூல்களை வெளியிட்ட பிறகு வீட்டிலும் அலுவலகத்திலும் அதற்கு முன்பு நடந்த அவரும் நானும் சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளை அசைபோட்டேன். ஒவ்வொரு நிகழ்வும் மனத்திரையில் அந்தக் காலத்தில் நான் முதல் தடவையாக பார்த்த கேவா கலர் பிம்பங்களாகத் தோன்றின. இன்னும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இப்போது பின் நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன்.

அமரர் ஆதித்தனார் சார்பாக தினத்தந்தி அறக்கட்டளை மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கும், தமிழ் படைப்பாளி ஒருவருக்கும் 1995ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஆளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவில் கொடுத்து வருகிறது. இதற்காக நான் அலிகளை மனிதநேயமாக சித்தரித்து எழுதிய வாடாமல்லி நாவலை அனுப்பி இருந்தேன். என்றாலும், மூத்த தமிழறிஞர் விருதை சாலய் இளந்திரையனாருக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக எனது விருதை விட்டுக் கொடுக்க முன் வந்தேன். அவருக்கு எழுபது வயது எட்டவில்லை என்ற காரணத்தால் விருது இல்லையென்று ஆனபோது, பரவலான வாசகப் பரப்பைக் கொண்டிருந்தாலும் சரியான அங்கீகாரம் பெறாத எழுத்தாளர் ரமணிச்சந்திரனுக்கு அந்த விருது கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த பரிசு அப்போதைக்கு வேண்டாம் என்றும், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்லி விட்டேன்.