பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

என் பார்வையில் கலைஞர்



‘சமுத்திரம்! எல்லாருக்கும் நன்மை செய்யணுமுன்னுதான் நான் நினைக்கிறேன். கட்சிக்கு அப்பால் எல்லா மக்களையும் ஒரே மாதிரிதான் பார்க்கிறேன். பல நல்ல காரியங்களை செய்து வருவது உங்களுக்கே தெரியும். அப்படியும் யாராவது ஓட்டுப் போடா விட்டால் அதற்கு நான் என்ன சமுத்திரம் செய்ய முடியும்’

என் கண்கள் கலங்கி விட்டன. ஒரு மகத்தான் தலைவர், மாபெரும் முதல்வர், ஒரு எழுத்தாள சாமனியனிடம் எப்படியெல்லாம் மனம் விட்டு பேசுகிறார்! கட்சிக் காரர்களிடமும், அமைச்சர்களிடமும் கூட கூற முடியாத ஒரு கருத்தை என்னிடம் எப்படி முன் வைக்கிறார் என்பதை நினைத்ததும், நான் ஆடிப்போனேன். குறிப்பாக சண்முகநாதன் அவர்கள் மூலம் முரசொலியை தருவித்து கலைஞரே, தனது நெல்லை மாவட்ட சுற்றுப் பயண நிகழ்வு புகைப்படங்களை என்னிடம் காட்டியது என்னை பிரமிக்க வைத்தது.

நான் கலைஞரை நீர் போங்கும் கண்களோடு நிலைகுலைவாய் பார்த்தேன். ஒரு மகத்தான் மனிதரின் அருகே இருக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ந்து போனேன். சிறிது இடைவெளிக் கொடுத்து எழுந்து நடந்தேன். ஆனாலும், கலைஞர் அன்று உணர்ச்சி வசப்பட்டு, என்னிடம் தெரிவித்த இந்தக் கருத்து மனதளவில் அவரது செயலாக்கம் எப்படி மாசற்று இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வாய்ப்பளித்தது. இதைக் கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் புரிந்து கொண்டார்களா என்பது வேறு விவகாரம்.