பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

என் பார்வையில் கலைஞர்



இதற்குப் பிறகும் கலைஞரிடம், எதிர் சக்திகளின் மேலாண்மை பற்றி பேசினேன். கலைஞர், நான் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர, பதிலளிக்கவில்லை. நான் பேசப்பேச, எதிர்சக்திகளை முறியடிக்க அல்லது எதிர் நோக்க, மேற்கொள்ளப் படவேண்டிய வியூகம், அவர் மனதில் எழுந்ததாக நினைக்கிறேன். நானும், கலைஞரை அந்த வியூகத்திற்குள்ளேயே விட்டு விட்டு சண்முகநாதன் டெலிகாமில் இன்னொரு பார்வையாளரை நினைவு படுத்தும் முன்பே வெளியேறினேன்.

கலைஞரைச் சந்தித்துவிட்டு அந்தத் தெருவின் எதிர் பக்கம் உள்ள வீட்டிற்குச் சென்றேன். எனது இனிய நண்பர் நாகப்பிள்ளை அவர்களின் இல்லம் அது. சென்னையில் எல்.எம்.எல் இருச்சக்கர வாகனங்களின், ஒட்டுமொத்த விற்பனையாளராக அதற்காக ஒரு தொழிற்கூடமும் வைத்திருப்பவர். தஞ்சையில் இப்போது மாருதி விற்பனைக் கூடத்தையும் வைத்திருக்கிறார். மிகவும் எளிமையானவர். அவரும், அவரது குடும்பத்தினரும் எனக்கு குடும்ப நண்பர்கள். அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். கலைஞரை நான் அடிக்கடிப் பார்ப்பது அவருக்குத் தெரியும். என்னிடம் கலைஞர் குடும்பத்தைப் பற்றி ஒரு சொற்பொழிவே ஆற்றிவிட்டார்.

கலைஞர் குடும்பத்தினர் குறிப்பாக பெண்கள் தனது மருமகள்களுடன் அந்தக் காலத்தில் இருந்தே இயல்பாக பழகுவார்கள் என்றும், ஒரு தலைவரின் மகள்கள் என்ற எண்ணத்தை எப்போதுமே கொடுக்கமாட்டார்கள் என்றும் வாயாரப் பாராட்டினார். அவர் தெரிவித்த பிறகுதான் எனக்கு கலைஞர் குடும்பத்தினர்கள் அனைவரைப் பற்றிய விவரங்களும் தெரியும். ஆக மொத்தத்தில் அந்த நாலாவது குறுக்குத் தெருவில் சொந்தமாய் குடி வந்த நாளிலிருந்து கலைஞரும், அவரது குடும்பத்தினரும் அனைவருக்கும், நல்லதொரு அண்டை வீட்டுக்காரர்களாகத்தான் நடந்து வருகிறார்கள் என்று அவர் பெருமிதமாகக் குறிப்பிட்டார்.