பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

167



என்றாலும், கூட்டம் முடிந்ததும் எனக்கு செம டோஸ். குறிப்பாக தோழர் செந்தில்நாதன், என்னை கடுமையாக விமர்சித்தார். எனது தலைமையுரையில் வள்ளலார் வளாகத்தில் இன்னென்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லத் தவறிவிட்டேன். அதனால் தான் கலைஞரும் பேரவையின் கோரிக்கைகைகளைப் பற்றி குறிப்பிடவில்லை என்றார். உடனே நான் எழுத்து மூலமாக கலைஞரிடம் கொடுத்திருக்கும் விண்ணப்பத்தை நினைவுபடுத்தி மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்ல விரும்பவில்லை என்றேன். அதற்கு தோழர் செந்தில்நாதன் இதர உறுப்பினர்களின் மவுன சம்மதத்தோடு ‘நீங்கள் இந்த கோரிக்கையை கூட்டத்தின் முன் வைத்திருக்க வேண்டும். அவர்களும் ஆரவாரம் செய்திருப்பார்கள். கலைஞரும் மக்கள் கருத்துக்கு மதிப்பளிப்பவர். நமது கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை ஏற்றிருப்பார். நீங்கள் ரகசியமாக கொடுத்தது ரகசியமாகவே போய்விட்டது’ என்று விளக்கினார்.

எனக்கும் என்னவோ போல் இருந்தது. கலைஞர் முன்னிலையில் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் இன்னும் என்னுள் உள்ளது. அதே சமயத்தில் கலைஞர் சுயமாக சில நடவடிக்கைகளை அறிவித்திருக்கலாமே என்ற வருத்தமும் எனக்கு உண்டு. வள்ளலார் அன்பர்கள் சிலர் கலைஞரை சொல்லிக் குற்றமில்லை திருவருள் இன்னும் கைகூட வில்லை மேலும் மேலும் வள்ளலாரை முன்னிலப்படுத்திய பிறகே, அந்த வளாகம் மேன்பட வேண்டும் என்று இருக்கிறதோ என்னவோ என்றார்கள்.