பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼器演 லா ச. ராமாமிருதம்

கொள்பவள் நீயா அனு? நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டுவதுபோல், நக்ஷத்திரத்தை உதிர்த்துக் காட்டு கிறாயே, நீயா அனு? நீ பயத்துக்கு உரியவள், ஹஅம்

'Sol' அனுவின் பெருமூச்சு பேச்சினும் பேசும் பெருமூச்சு, தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மறுபடியும் இப்போ ஒரு கட்டம் வந்துவிட்டது, நாட்டுப் பெண்கள் நாலுபேர் வந்தாச்சு. ஆனாலும் சூசிருவுையெல்லாம் பாட்டிதான். மத்திவாளை விடவில்லை. ஏற்கனவே புனர்ப்பாகம் அதை இன்னும் பையா, புளிக்காத மோரிலோ, பாலிலோ கரைச்சு திப்பியை எறிஞ்சுட்டு, நினைப்பில்லாத வாயில், சிறுகச் சிறுகச் செலுத்தப் பொறுமைக்கு மத்தவாளை எப்படி தம்புவது? தவிர அப்பப்போ துணி மாத்துவது, உடல் சம்பந்தமான காரியங்கள் வேறேயிருக்கே! ஒரு நாளா, இரண்டு நாளா, ஒவ்வொரு நாளா மூன்று வருடங்கள்...

ஆனால் இப்டோ ரெண்டுபேருக்கும் வயசு என்ன ஆச்சு? தாத்தாவுக்குப் படுக்கையிலேயே கரைச்ச சாதத் திலும், கஞ்சியிலும், உடம்பு அன்னாடம் இம்மியென ஒடுங்க ஆரம்பிச்சாச்சு. அதைப் பார்க்கப் பார்க்கப் பாட்டி யின் உடல் கோளாறுகள் அதிகரிக்கத் தலைப்பட்டன.

கூடவே எல்லாவற்றிற்கும் மேல் ஒரு திகில் நெஞ்சில் எலி பிராண்டல் அடிக்கடி அவளை அறியாமலே கை, தாவிச் சரட்டைத் தொட்டுக் கொள்ளுமாம். பழுத்த சுமங்கலி. வாய்விட்டுச் சொல்விக்கிற விஷயமா? மானத்தின் ரூபங்கள் எப்படி எப்படியெல்லாம் எடுக்கின்றன? இது சமுதாய எடை மானம் இல்லை. வேறு ஏதோ ஒண்ணு, அவாவாளுடைய சத்தியத்தின் எடை. அவாவாளுக்கு மட்டும்தான் தெரியும் Gu first offég. &#3'ssing 3sraël.” Spell bound. But not Hitchcock, சொல்லே மந்திரமடா அது இது.

ஆகவே ஒரு வெள்ளிக்கிழமை. எண்ணெய் ஸ்னானம் பண்ணிண்டு, பட்டு உடுத்திண்டு, குத்துவிளக்கை ஏற்றி நமஸ்காரம் பண்ணிவிட்டு, பாட்டி, விசுப்பலகை அடியில்,