பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 荒2毒

நான் லக்ஷ்மணக் காவல் புரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால், பாஸ்கர், நான் உன்னைவிட ஓரிரண்டு வயது மூத்தவனில்லை? எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது?

எழுதி எழுதிக் கைவலிக்கிறது. கொஞ்சம் of

அறைக்கு வெளியே மொட்டை மாடிக்கு வந்தான். புகையை இழுத்து மார்புள் தங்கவைத்து, கொஞ்சங் கொஞ்சமா 'புக் புக் வெளியே விட்டதும், அம்மாடி! என்ன சுகம்! வேறு சமயம் இந்நேரத்துக்கு ஒரு பாக்கட் காலியாகி யிருக்கும். எழுதுவதே ஒரு discipline போல இருக்கே:

அற்புதமான இரவு எட்டித் தொட்டுவிடலாம் போல் வான்கவானில், ஒரு பூப்பாரம் கட்டவிழ்ந்து சரிந்ததுபோல், ஒரே நக்ஷத்ரக் கொள்ளை. லேசான ஒரு கம்’ கூட உண்மையிலா, அல்லது மனம் மனதை ஏமாற்றா?

இந்த நக த்ரங்களில் எது எனது? இருபத்தி ஏழு அற்ற மற்றதெல்லாம் அநாமி-நானும் ஒரு அநாமி. பின் என்ன, இதுவரை என்ன சாதித்தேன்? புஸ் புஸ் புஸ்-களிமண் பட்டாள். நான் செத்தால் எனக்காக அழ, அச்சாரம் கொடுத்து, சம்பளத்துக்கு அமர்த்தியாகனும், என்ன தமாஷ்:

இந்த ப்ரம்மாண்டமான தேன்கூடில், என்னைப் பெற்ற வர்கள் எங்கிருப்பார்கள்? எனக்காகக் காத்துக்கொண்டி, பார்களா? அல்லது மீண்டும் தங்கள் தனித்தனிப் பிறவிகளை யெடுத்துத் தங்கள் தங்கள் தேன்களைத் தேடிக்கொன் டிருப்பார்களா? அங்கு போயும் என் தனிமையின் குளிரில் வெடவெடத்துக் கொண்டு, அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கனுமா?

அனுவின் பாட்டியும் தாத்தாவும்-No. தங்கள் வளை யில் பத்திரமாக. கதகதப்பாக, அடக்கமாக அடங்கியிருப். பார்கள். அவர்கள் இனி தேன் தேட வேண்டாம்.