பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 3 வா. ச. ராமாமிருதம்

சுமதிக்கு வாதம் முழுக்கப் புரியவில்லை. ஆனால்

தன்னை அறியாமலே தன்னுள் ஒரு நெகிழ்ச்சி உணர்த்தாள்

சகுந்தலை-துஷ்யந்தன்

ரோமியோ-ஜூலியட்

மும்தாஜ்-ஷாஜஹான்

சுமதி-ப்ரபு.

அப்படித் தோன்றியதும் ஆச்சரியமாயிருந்தது. அற்புத மாயிருத்தது.

சற்றுத் தயக்கத்துக்குப்பின்,

கேரி-வில்லியம்ஸ்

ஊஹாம், ஒவ்வி வரவில்லை. இந்தக் கூட்டத்தில் சேர்க்கும் பருவத்தை இவர்கள் தாண்டியாச்சு. மேரி நிச்சய மாக இவரைவிட மூத்தவள். மேரியின் கணவன் அவளை விட நிறைய வயது வித்தியாசமானவனாகத்தான் இருக் கனும்

மேரி மேலும் சொல்லிக் கொண்டிருந்தாள். உங்கள் வயதுக்கு நீங்கள் வெளியிட்ட அபிப்ராயம் மூதாயிருக்கிறது. அதுவும் புதுக் கலியான ஜோடி’

சுமதியைப் பார்த்து சிரித்தாள்.

வில்லியம்ஸ் எதுவும் பேசவில்லை. இத்தனைக்கும் ஒரு புன்னகையுடன் சரி. சலுகைப் புன்னகை, சிறிசுகள்,

மேரியையும் சேர்த்து.

மார்மேல் கைகளைக் கட்டியபடி, யோசனையில் ஆழ்ந்த வண்ணம் மேரி நடந்தாள் சிறிதுநேரம் நால்வருமே பேச வில்லை, அவளுடைய கண்ட சதைகள் மொழு மொழுப் பாயும், மழமழவென்றும் இருப்பதை சுமதி கவனித்தாள். அங்கங்கே பொன் ரோமச் சுருள்கள்.