பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2鲁翰 லா ச. ராமாமிருதம்

டிருக்கிறது. அது என்ன? என்னை அறியாமலே என்னை பற்றி நான் படும் கவலையை ஏதோ மேலிடத்தில் ஒப்படைத்துவிட்ட விக்ராந்தி. அந்த மேவிடம் எது? இது தற்போதைய நிலையாலே இருக்கலாம். ஆனால் இதில் ஏதோ ஒரு ஹாய் இருக்கிறது. பழகிக்கொண்டு விட்டால் இதைவிடச் சுகம் இல்லை.

பிறந்த குழந்தையைப் பசி தாக்கும் வேகத்தில் வீல்" என்று துடித்து அழுகிறது. உடனே அதன் வாயில் திணிக்கப் படும் முலைக்காம்பின் வழி உள் பாயும் அன்பின் சுரப்பும், இன்னும் பார்வையும் நிலைக்காத நிலையில், அதன் பிஞ்சுக் இர தேடிக் கண்டு அதன் கீழ் அழுந்தும் ஸ்தன பாரத்தின் மெத்துதான். உணர்ச்சி பூர்வமாய் அதன் பூரண சரணாகத விளைவு முடிவாய அனுபவானந்தம்.

உயிரின் இந்த முழு அடைக்கலத்தைக் கடைசிவரை , அது பிறந்த தூய்மையுடன் வேண்டுவானெனில், அதில் இருவருமே அடையும் ஏமாற்றம் தவிர்க்கமுடியாதது, ஏதோ ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று அவனே தன்னுடைய அகண்ட கருணையில் ஏற்றுக்கொள்ளும் சமாதானத்தில்தான் இன்று என்னுடைய நடை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஏதோ ஒரு விதத்தில் அவன் விதித்தபடி அவனை நோக்கிய யாத் திரைதான்.

இவயிலில் கடுமையில்லை. நிழல்கள் நீளத் தொடங்கி விட்டன. லேசான பணி:

«rçf $5ಿಸr யாரோ பின்தொடர்வது போன்ற உணர்வில்

திரும்புகிறேன். ஆம்

முதலில் என் கண்ணில் பட்டதும் கவனத்தைத் தன்னில் இருத்திக்கொண்டதும், பெரிய இளநீர் போன்ற அந்தக் கூந்தல் முடிச்சுத்தான் கண்படுகிற பெரிது. பிடரிக்கு ஒரு பாரமாவேயிருக்கும் கனம். அந்த உடல் வாட்ட சாட்டத் தைப் பார்த்தால் ஆந்திரவாகு? 30, 85? 2.