பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器盛4 லா, ச, ராமாமிருதம்

உங்கள் சமையல் சுலபம்னா ஆயிடுத்தா? அவல் இடிச்சுத்தர ஆண்டாளு வரேன்னு இருக்கா இன்னிக்கு விட்டால் அகப்படமாட்டாள். மாட்டுக்குப் புண்ணாக்கு ஊற வைக்கணும். பருத்திக்கொட்டை அரைக்கணும். வரதன் பால் கறக்க வர நேரமாச்சு. நேற்று சாயந்திரம் சுருக்கக் கறந்தாச்சு. கொட்டாய்ப் பக்கம் எட்டிப் பார்க் கல்லே. மடிகனம் தாங்காமல் மாடு தவிக்கிறதோ, இல்லே கன்னுக்குட்டி து ம் ைபயறு த் து ண் டு துள்ளி விளை பாடறதோ? முத்தத்தில் தேய்க்கற பத்து அம்பாரமாகக் கிடக்கு.'

சொல்லிக்கொண்டே கைகளைத் தரையில் ஊன்றிக் கொண்டு எழுந்தாள்.

  • உன் தலையெழுத்து. எக்கேடு கெட்டுப்போ' தள்ளாடித் தள்ளாடி நடந்து பின்கட்டுக்குச் சென்றாள். கிழவரின் கோபத்தில் ஊஞ்சல் வேகம் கண்டது.

-கலி யாணம் பண்ணினான்களாம், கல்யாணம்: சேஷோமம் பண்ணின வீடாம்! என்னைக் கேட்டால் மூனு: நாளாய் வீட்டில் சர்க்கஸ்னா நடந்தது! ஹோமம் எங்கே நடந்தது? புதுவேட்டியும் புதுப்புடவையும் சாத்தி நாற்காலியில் உட்காத்தி வெச்சுக் கலர் ஃபோட்டோ எடுத் துட்டா ஆயிடுத்தா? சடங்கிலெல்லாம் நம்பிக்கை இல்லை யாம்! என்னெதிரேயே இப்படிப் பேச என்ன துணிச்சல்:

இப்பவே தாஸ் புரசல் விட்டாச்சு. நீங்கள் ரெண்டு பேரும் இனிமேலும் இங்கேயிருந்துண்டு என்ன பண்ணனும்? பட்டணம் வந்துடுங்கோ, இவன் எண்ணம் எனக்குதி தெரி யாதா? கார்க்கோடகன். நிலத்தை வித்துப் பணமாக்கிப் பங்காக்கணும். ஆமாம், எங்கே பணம் அதிகமாயிருக்கோ அங்கேதான் தேவையும் அதிகமாயிருக்கு, விபரீதம் அமலி: அமவி என்ன பண்றே?* -