பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமலி 229

• நான் மஹாபுருஷன் இல்லை," என்று அவர் முனு. முணுத்தாலும் உள்ளுர சந்தோஷமாயிருந்தது.

அதுக்காக விரதம் எடுத்தேன். அப்படிப் பட்டினி கிடந்தேன், இப்படி மெலிஞ்சேன்னு சொல்லல்லே. பெருமாளுக்கு அங்கப்ரதrணம் பண்ண யாரோ சொன் -னாள். மறுத்துட்டேன். பிராகாரத்தில் நான் உருண்டு நாலுபேர் கண் எச்சில் என்மேல் பட நான் விரும்ப வில்லை."

அடுப்பை ஊதினாள். ஜ்வாலை குயீரிட்டது.

உங்களைப் பார்த்த ஆறா மாசமே நான் உங்களிடம் வந்து சேர்ந்துட்டேன், வெச்சுக்கோங்கோ தவம் என் கிறது கண்ணை மூடிண்டு மாலையை உருட்றது இல்லே. தவங்கிறது ஒரு நினைப்பின் ஒரே நினைப்புன்னு தோணறது. வங்கியோடுதான் வந்தேன். மூனரைப் பவுன்."

ஆகாதா? நீ போனப்போ பதினஞ்சு வயது; வந்தப்போ பதினெட்டு. இல்லையா?”

ஒஹோ, கேவி பண்ணறேளா? நானே சத்தே வாளிப்புத்தான். என்னவோ துர்க் கனா. ஆனால் மறக்காத கனா. சரி, வென்னீர் கட்டுப்போச்சு. குளிக்க வாங்கோ. '

அவர் சந்தியாவந்தனம் பண்ணிவிட்டுப் பூஜை அறையுள் நுழைந்தபோது அவள் சுவாமி அலமாரியெதிரில் கைகூப்பியபடி நின்றிருந்தாள். அவர் வந்தது தெரிய வில்லை. அவருக்குக் கொஞ்சம் நெஞ்சைப் பிராண்டிற்று: ஆச்சர்யமா, பொறாமையா?

அவள் கண்ணைத் திறந்ததும்: : தியானம் மும்முரம் போல இருக்கு, அப்படி என்ன வேண்டுதலையோ?”