பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச்சி வெய்யில்

குளிர், பல் கிட்டிற்று போர்வையை மேலே சுற்றிக் கொண்டு பாறைமீது உட்கார்ந்தபடி, பிள்ளையின் வருகைக் குக் காத்திருந்தார். மணி ரெண்டுக்கு மேலாறது இன்னும் காணோமே. நைட் ஷிஃப்டில் 12-30 மணிக்கே திரும்ப வேண்டியவன்.

உலகில் உயிரிலாதது எதுவுமில்லை. கல்லானாலும் எங்களுக்கும் வளர்ச்சி உண்டு. உங்கள் கணக்கில் எத்தனையோ வருடங்களில், கால், அரை அங்குலம் கூடி யிருப்போமாம். -

யார் யாரோ எத்தனை எத்தனை முறையோ, காலம் காலமாய் என் மேல் நடந்து சென்றிருப்பரோ! ஆனால் இந்தப் பெரியவர், இந்த நள்ளிரவில், என்மேல் உட்கார்ந்து தன் மகனுக்குக் காத்திருந்த வேளையில்தான், அவருடைய பிள்ளைப் பாசத்தின் நெஞ்சு நெகிழ்ச்சியில், என் ப்ரக்ஞை யின் முதன் மூச்சு என்னுள் பாய்ந்திருக்க வேண்டும்.

ஒண்டியா சமைத்துச் சாப்பிடறான். ஒட்டல் சாப்பாடு ஒத்துக்கல்லியாம். கட்டுப்படியும் ஆகல்லே. ஆறு மாசத்துக் கொரு தடவை ஊருக்கு வந்து தங்கும் அந்த ரெண்டு மூணு நாளில் அவனைப் பார்க்க வயிறு ஒட்டிக்கறது. இளைச்சு, கறுத்துப்போய்...பாதி நாளைக்குச் சமைக்கமாட்டானாம். .ராத்திரி டுட்டியிலிருந்து திரும்பினதும், ஆடையைக் கூடக்