பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச்சி வெய்யில் 忍盛器

கெட்டதா? புரியாத புதுக்கேள்வி வாட்டுகிறது. ஆனால், எது என்ன , எப்படி நேர்ந்தாலும் என்னால் என்ன செய்ய, மு. யும்? அன்றொரு நாள் பறந்துகொண்டேயிருந்த பக? ஒன்று பொத்தென என்மேல் விழுந்து பொடி நேரத்தில் உயிரற்று சிறகுக் குதறல் ஆகிவிட்டது. மாரடைப்பா, சிறகின் களைப்பா, விழுந்த அதிர்ச்சியா, எது எப்படியிருந் தாலும் என்னால் என்ன செய்ய முடிந்தது? மொத்தா கார மான, செயலற்ற ஜீவன்.

இப்போது ஒரு தனிமை தெரிகிறது. இது உணர்வு பெற்றதன் விளைவு அறிகிறேன். ஆயுசு, தனிமை, வெறிச்சோ-என்ன செய்வேன்? என்னைச் சுற்றி நல்லன, பொல்லாதன, சுகம், துக்கம், வாழ்வு, அறிவு நிகழ்வன யாவுக்கும் என்வரை செயலற்ற சாக்தி நான். இந்த உணர்வு வேண்டாம் என்று மறுப்பதும் என்னிடம் இல்லையே! பெற்றபோது தேடியா பெற்றேன்?

ஆனால் பெற்றதை இழக்கவும் மனமில்லை. சம்பவங் களின் பவனி, ஆச்சர்யம் குன்றா அனுபவம், உணர்வு இலாது இது சாத்தியமா?

ஒரு நாள்

இரவு டியூட்டியிலிருந்து திரும்பி வந்து பாயில் விழுந்துகண்கள் எரிந்தன-அடித்துப்போட்டாற்போல் களைத்து : அவ்வப்போது கலைந்த தூக்கங்களிலிருந்து ஒருவாறு மீண்டு பா. ர் ைவ சுவர்க்கடியாரத்தில் நிலைத்ததும் அது பதினொண்னு காட்டியது அவனுக்கே ஆச்சர்யமாயிருந்தது. இத்தனை நேரமா ஆயிட்டுது? -

சோம்பல் முறித்து எழுந்து, வாயில் டூத்-ப்ரஷ்ஷ"டன் வாசலுக்கு வந்தான். பாறைமேல் கூட்டம், ஐந்தாறு பேர் நெருக்கமாக நின்றாலும் கும்பல்தான். மேலும் கீழுமாய்ப் பார்த்துக்கொண்டு, சிரித்துக்கொண்டு, கொக்கரித்துக் கொண்டு, ஒரிரு விரல்கள் உற்சாகமாய் ஆகாயத்தைச்