பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரியமுள்ள வாசகர்களுக்கு

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முதுபெரும் எழுத்தாளர் உயர்திரு லா.ச.ரா. அவர்களின் புதிய சிறுகதைத் தொகுப்பை வாசகர்களுக்கு வானதி பதிப்பகம் பெருமையுடன் வழங்குகிறது. இதிலுள்ள கதைகள் எல்லாம் பிரபல பத்திரிகைகளில் வெளி வந்தவை. என்றும் அழியாக சித்திரங்களாக விளங்கும் அதியற்புதமான கதைகளை வடித்துப் புகழுக்குமேல் புகழ் சேர்த்துக்கொள்ளும் சிறு கதைச் செம்மல் உயர்திரு லா. ச. ரா. அவர்களை நன்றியறிதலோடு போற்றுவது தமிழ் மக்கள் கடமை. அவருடைய கதைகளை தமிழ் வாசகர் களுக்கு வழங்குவதே எங்கள் தலையாய கடமை என்று கருதி இச்சிறுகதைத் தொகுதியை வெளி யீட்டுள்ளோம். நூலாசிரியர் லா.ச.ரா. அவர் களுக்கும் பிரியமுள்ள தமிழ் வாசகர்களுக்கும் எங்கள் நன்றி.


ஏ.திருநாவுக்கரசு
வானதி பதிப்பகம்