பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器盛 லா, ச. ராமாமிருதம்

தற்செயலில் என் இடது மணிக்கட்டில் வலதுவிரல் தனிப்பட்டு-ஆச்சரியமாயிருந்தது; அப்படியே கையைக் காதண்.ை கொண்டுபோய் ஒட்டுக் கேட்டேன். காதுக்குத் தெரியல்லே. ஆனால், விரலடியில்

அம்மா அம்மா! கை உள்ளே என்னவோ டக்

உக்’

அம்மா சிரித்தபடி, முன்றானையில் கையைத் துடைத் விக்கொண்டே வந்தாள். பிரிகள் கலைந்து சற்றுப் பரட்டை யாகிவிட்ட அவளது நெற்றி மயிர் மாலை மஞ்சள் வெயில் ஆட்டுப் பொன்னாய்ச் சுடர் விட்டது"

என் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு அதுக்கு. நாடின்னுபேர்.” -

அப்படீன்னா?”
உயிர் துடிப்புன்னு அர்த்தம்.'

அப்படின்னா?’ நாடி அடிச்சுண்டு இருக்கும்வரை உயிர் இருக்குன்னு அர்த்தம்.'

அடிக்காட்டி’

உதட்டைப் பிதுக்கிச் சிரித்தாள்.

. உன் கையைக் கொண்டா, பாக்கறேன்.'

அவள் மணிக்கட்டில் என் விரல் நுனியை வெச்சுப் பார்த்தேன்.

எனக்கு ஒண்னும் கேக்கவியே.'

உனக்குப் பார்க்கத் தெரியல்லே அவளே பார்த்துக் கொண்டாள். முகம் மாறிற்று. மறுபடியும் பார்த்துக் கொண்டாள். இந்த முறை நேரமாக, -

அப்பா வராளா பாரு’ அபபா வரல்லே, ஆனால், வர நேரம்தான்.