பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔器 வா. ச. ராமாமிருதம்

யார் வந்து என்ன?

ஒருவேளை நாடி விளையாட்டு விளையாடாமல் இருந்தா, அம்மா இருந்திருப்பாளோ?

ஆனால், அம்மா தந்த முத்தம்

என்னிடம் பத்திரமாயிருக்கு,

பழங்கணக்கு ஓயாத கணக்கு அசை போடப் போட அதிகரிக்கும் கணக்கு,

மனமில்லாமல் படுக்கையை விட்டு எழுகிறேன். ஞாயிறுக்கு மறுநாள் திங்கள் எப்பவுமே ஆபீஸ் நுகத்தடிக்குக் கழுத்தைக் கொடுக்க மனமில்லா கசக்கும் நாள்.

திடீர்ப் பொடியில் சோம்பேறிக் காபி கலக்கிறேன். பிடிக்கவில்லை. குடிக்காமலும் முடியவில்லை. வீட்டுக் காபி வீட்டுச் சோறுக்கு நினைப்பு எடுத்து அடக்கமுடியாவிட் டால் இரண்டு மாதங்கள், மூணு மாதங்களுக்கு ஒருமுறை அண்ணா வீட்டுக்கு, மன்னி சமையல் மிகவும் நன்றா யிருக்கும்.

நேற்று இரவு ரயிலடிக்குப் போயிருந்தேன் மன்னி , குழந்தைகள், அண்ணாவை வழியனுப்ப. கடைசி நேரத்தில் அண்ணா பயணத்துக்குக் கொசிராய் ஒட்டிக்கொண்டான். ரயிலடியிலேயே ஒரு வீவு மனு எழுதி தன் ஆபீசில் சேர்த்து விடும்படி என்னிடம் கொடுத்துவிட்டான். மன்னி தீபாவளிக்குப் பிறந்தகம் போகிறாள், நானும் கூடப்போய், விட்டால் எனக்குத் தீபாவளி செலவு மிச்சம் பாரு. மாப்பிள்ளை பழசானாலும் மாமனார் சும்மா விட்டுவிடு வாரா?' என்று மன்னி எதிரேயே சொல்கிறான். தவிர மிச்சினிகள் குறு குறு’ என்று என்னைக் கண் அடிக் கிறான். - -

அவனுக்குள் மிக்க சாமர்த்தியமாகவும் வேடிக்கையாக வும் பேசுவதாக எண்ணம், அண்ணாவின் றாபனாக்கள்’ சரிப்படாமல்தான் அவனுக்குக் கவியாணமான சுருக்கிலேயே நான் ஹாஸ்டலில் இடம் பார்த்துவிட்டேன். -