பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

முடியரசன்



குழந்தையாவது பிறந்ததா? ஏன் பிறக்கவில்லை ? நல்ல நாள், மாமுது பார்ப்பான், மறைவழி, தீவலம் இவையெல்லாம் என்னவாயின? அவற்றால் அவர்கள் வாழ்க்கையில் வளமும் மகிழ்வும் மலர்ந்திருக்கக் கூடாதா? என்று சற்றே எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

மங்கல வாழ்த்துப் பாடல் மட்டுமன்று; சிலம்பு முழுதும் ஊன்றிப் பயில்வார்க்கு அதன் அருமை பெருமைகளும் இளங்கோவடிகளின் காப்பியத் திறனும் நன்கு புலனாகும். இதனாலன்றோ கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள்,

"தேனிலேஊறியசெந்தமிழின்சுவை

தேரும் சிலப்பதிகாரம்"

என்று பாடினார்.


◆◆◆◆◆