பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வில்லியம் பலிக்க வைத்து விட்டான். கர்ப்பமானாள். குழந்தை பிறந்தது. ஜேன் எதிர்பார்த்தபடி பெண்ணல்ல. ஆண். அவன்தான் ஆஸ்கார் ஒயில்டு. அவனுக்குப் பிறகு ஐஸோலா பிறந்தாள். - ‘. - - இதுவரைக்கும் ஒரு மனை வியை, அவள் இரண்டு உதடுகளை முத்தமிட்டு வந்தவன், இப்போது பல பெண்களின் பல உதடுகளை இவன் ஒரு

வாயால் சுவை பார்க்கத் தொடங்கி விட்டான்.

இப்படி, வெளி இன்பம் அனுபவித்துக் கொண்டே வரும்போது...... ஒரு நாள்...... வெள்ளிக் கிழமை, மேற்கு சிவந்த அந்தி நேரத்தில் வில்லி யத்தைத் தேடிக்கொண்டு ஒருத்தி, ஆஸ்பத்திரிக்கு வந்தாள். ' வந்த வாலிபப் பெண்ணை வில்லியம் வரவேற்றான் எனக் குக் கண்நோய். அதற்காக வந்தேன் என்றாள்: - -

- இவள், என் கண்னுக்கு ஏற்றவள். எப்படியாவது அனுபவித்துவிட வேண்டும் ” என்று எண்ணிக் கொண்டான் பெயரைக் கேட்டான். மேரி என்றாள். எங்கேயோ பார்த்த்துபோல் இருக் கிறதே என்றான். இருக்கலாம், நான் பேராசிரியரின் மகள். என் தந்தை ட்ராவெர்ஸ். அவரை உங்களுக்குத் தெரிந்திருக்கும் ? என்றாள். இப்படிச் சொல்லிக்கொண்டே வில்லியத்தைக் கண்ணால் கூப்பிட்டாள். * *

. . இவள் வைத்தியத்துக்கு வர வில்லை. சரீர வியாபாரத்துக்காக வந்திருக்கிறாள் என் பதைப் புரிந்து கொண்டான். அவ்வளவுதான், அவளும் அவனும் சில நிமிஷ நேரத்துக்கு புருஷனும் மனைவியுமாக இருந்து கொண்டார்கள். இவர்கள் முத்தம், சத்தத் தோடும், தித்திப்போடும், நித்தம் வளர்ந்துகொண்டே வந் தது. அதை வளர்த்துக்கொண்டே வந்தார்கள். ஆனால், அவள் முத்தத்துக்கு-இவன் முத்தம், அதற்குப் பணம்,

தந்துகொண்டே வந்தான்.

சுரதா 2 L.