பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி. சிற்றரசு 23 படைத்த எஸ்டெரெஸியைப் பார்த்துக் குலைநடுங்கி விட்டனரா ? என் நாடு சாகத் துணிந்துவிட்டது. அதைக் காப்பாற்ற நான் சாவேன். ஆனல் என் நாட்டை நான் செத்த பிறகும் சாக விடமாட் டேன். பாபம் ! சட்டம் பசி பொறுக்க முடியாத' குழந்தையாய் விட்டது. அழைப்பவர்கள் கைகளி லெல்லாம் தாவுவதைப் போல் இந்தப் பாவிகளின் கைகளில் தாவிவிட்டது. செலா : எல்லாம் நாடகம். ஜோலா ஆம் யூத எதிர்ப்பு நாடகம். முடிந்துவிட்ட தென்கிருயா செஸ்ானே ? s செலா: அப்படித்தான் நினக்கின்றேன். ஜோலா: பைத்தியக்காரா! முடியவில்லை. இன்னும் ஜோலா முடியவில்லை. இப்போதுதான் நம்பிக்கை பிறந்திருக்கின்றது. இந்த உதவாக்கரை நீதி மன்றம் அளித்த தீர்ப்புதான் முடிவானதென எண்ணுகிருயா? அது இதைவிட வேறு ஒரு நல்ல தீர்ப்பையளிக்க முடியாது ஏனெனில் அந்த (அ) நீதிக்குழு சர்வமும் யூத எதிர்ப்புமயம். அது கொடுத்த நீதியே உலகத்தின் கடைசி முடிவல்ல. இனி கேட்க வேண்டியவர்களைக் கேட்போம் கவலைப் படாதே, டிரைபஸின் தூய உள்ளமே நமது போராட்டத்தின் வாளாக இருக்கட்டும். ஆனால், இந்தத் தகாத தீர்ப்பின்மூலம் நமக்குப் பலப் புதிய எதிரிகள் தோன்றுவார்கள். செலா: இனி நம் கட்டுரைகள்...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/24&oldid=759911" இலிருந்து மீள்விக்கப்பட்டது