பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி.சிற்றரசு 51. குடியரசைக்காப்பாற்ற முதல் பொறுப்பேற்றுக்கொண்டி ருக்கும் பலம் பொருந்திய இராணுவம், குற்றமுள்ள எஸ்டரெஸியைக் காப்பாற்ற முனைந்து, தன் கடமையை அறவே மறந்து, எஸ்டரெஸி வாழ்க யூதர்கள் ஒழிக. என்ற எக்காளமிட்டுக் கொண்டிருக்கின்றது. இது நமது நாட்டின் சமாதானத்துக்கு ஒரு நல்ல அறிகுறியா என் பதை எண்ணிப்பாருங்கள். . . எஸ்டரெஸி பின்பற்றுகிறது.த எதிர்ப்பு இயக்கம் வாழவும், டிரைபஸ் பிறந்த இனமான் யூத இனம் ஒழிய வும் ஒரு நாட்டின் இராணுவமே சூழ்ச்சி செய்யுமானுல் நாடு யாரிடம் பாதுகாப்பைத் தேடுவது. இந்த களங் கத்தை யாரால் எந்த காலத்தில் மாற்றமுடியும். ஆகவே, நீதி ஒன்றில்ைதான் இந்த களங்கத்தை மாற்ற முடியும் என்பதை நீங்கள் திடமாக நம்ப வேண்டும். டிரைபஸின் சோகம் நிறைந்த வரலாற்றை நீங்கள் அன்வரும் உணர்ந்தவர்களே. நீங்களனைவரும் நீதி. 'யின் இதயங்கள். நீங்கள் இப்போது என்ன சிந்தித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் ஒரு காலத்தில் ஜூரியாக இருந்த அனுபவத்தால். ஒவ்வொரு மனிதனையும் காப்பாற்றி வேண்டியது உங்களுடைய நீங்காத கடமை. நீங்கள் உங்கள் சொந்த துன்பத்தை எண்ணுவதின் மூலந்தான் பிறருடைய துன்பத்தை அறிய முடியும். ஏனெனில், நீங்களும் மனிதர்கள். ஆகவே இந்த வழக்கை எந்த நுணுக்கமான ஆராய்ச்சியின் மூலம் முடிக்கலாம் என்ற முடிவிலே உட்காருங்கள். . யாரோ ஒரு - அடையாளம் தெரியாத - அப்பாவி பூதத்திவிலே இருக்கின்றன் என்று அலட்சியமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/52&oldid=759942" இலிருந்து மீள்விக்கப்பட்டது