பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 0 முருகுகந்தரம் (மூத்த பேராசிரியர் இருவர் மாணவர் போராட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்) இந்திரஜித் :

டேய் சொற்கோ! தஞ்சைப் பெருவுடையாரும் 'செகண்ட் இட் சீனிவாசனும் வருகிறார்கள்.

(கணக்குப் பேராசிரியர் கனகசபை தஞ்சாவூர்க் காரர்; இரட்டை நாடி உடம்புடையவர், அவருக்கு மாணவர்கள் வைத்த பெயர் தஞ்சைப் பெருவுடையார். ஆங்கிலப் பேராசிரியர் சீனிவாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில், துணைவேந்தர் ஏதேனும் தீர்மானம் கொண்டுவந்தால், உடனே எழுந்து second it என்று கூறுவார். அதனால் மாணவர்கள் அவருக்கு செகண்ட் இட் சீனிவாசன் என்று நாமகரணம் செய்திருந்தனர்)

&6&tool i :

தம்பி சொற்கோ! துணை வேந்தர் கூப்பிடுகிறார்! போகலாம் வா!

சொற்கோ:

ஏன்? எதற்கு சீனிவாசன் :

என்ன குறையிருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். போராட்டம் எதற்கு? சொற்கோ:

எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகுதான் பேச்சு வார்த்தை!