பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 0 முருகுசுந்தரம்

மேகலை :

எண்ணிக்கையில் குறைந்தவர்கள் என்பதற்காக அநியாயம் என்று பட்டதை எதிர்க்காமல் இருக்கக் கூடாது. சில சமயங்களில் குருவிகள் கூடத் தறகாபபுக காகப பெரிய வல்லுறைத் துரத்துவதைப் பார்த்திருக்கிறேன் காலில் மிதிபடும் கட்டெறும்பும் நம்மைத் திரும்பிக் கடிப்பதில்லையா?

(மருத்துவர் உள்ளே வருகிறார்)

மேகலை :

வணக்கம் டாக்டர்!

மருத்துவர்:

வணக்கம்.

மேகலை :

நம்பிக்கு - ஆபத்து எதுவுமில்லையே? மருத்துவர்:

மூளையில்சேதம் ஏதுமில்லை. நினைவுதிரும்ப இன்னும் சிலமணிநேரம் ஆகும்.

(அப்போது பணியாள் ஒருவன் வந்து துணைவேந்தர் அழைப்பதாகச் சொல்லி மேகலையை அழைத்துச் செல்லுகிறான், வீணா நம்பியைப் பிரிந்து செல்ல மனமில்லாமல் அவன் படுக்கைக்கருகில் நாற்காலியில் அமர்கிறாள்)