பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 18 உள்ளத்தில் கைவைத்துச் சொல்லுங்கள்! இவைதான்போராட்டத்துக்கு உண்மையான காரணங்களா?

மெளனம் எல்லாரும் விழிக்கின்றனர்) ஏன் உங்கள் வாயடைத்து விட்டது? பேசுங்கள்!

(எல்லாரும் தலைகுனிகின்றனர்) பேசமாட்டீர்கள்! அக்காரணத்தை வெளியில் சொல்ல உங்கள் நாகூசுகிறது! அப்படித் தானே? வெளியில் சொல்லமுடியாத காரணத்துக்காக வேண்டாத கோரிக்கைகளை

முனவைதது போராடுகிறீர்கள்! குட்டி ஆட்டைக் குறை கூறிக்கொன்ற ஈசோப்பின் ஒநாய்க்கும்

என்ன வேறுபாடு?

எங்கள் மீது பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு ஏற்பட்ட அவநம்பிக்கையினால்தானே பெண்கள் விடுதியின் வாயிலை அடைத்தார்கள்? நாங்கள்- . என்ன குற்றம் செய்தோம்?