பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 இ முருகுகந்தரம்

காட்சி 24

இடம் : பெங்களுர் நெடுமுடியின் இல்லம் நேரம் : மாலை. உறுப்பினர் : .நெடுமுடி, நம்பி, மேகலை, அம்ரிதா

எதிரில் அழகிய அல்சூர், ஏரி, சுற்றிலும் உள்ள எழில்மிகு கட்டிடங்களில் எரியும் விளக்குகள், வண்ணப்பட்டு முடிச்ககளாக தண்ணீர்ப் பரப்பில் மின்னிக் கொண்டிருக்கின்றன. காலையில் நெடுமுடி அம்ரிதா திருமண நிகழ்ச்சி பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. பெற்றோர்களும், சுற்றத்தாரும், நண்பர்களும் குழுமியிருந்து மணமக்களை வாழ்த்தினர். மாலையில் நெடுமுடியின் இல்லத்தில் நம்பியும் மேகலையும் மணமக்களோடு உரையாடி மகிழ்கின்றனர். மேகலை:

சில செடிகள்

தமது பூக்களின் வண்ணத்தாலும்

மயக்கும் மணத்தாலும்

தம்மைப்பெரிதாக

விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.

ஆனால் காய்ப்பதில்லை

அத்திமரமோ

பூக்காமல் காய்க்கிறது.

சிலர் தம்மைப்

பெரிய சீர்திருத்தவாதிகளாக

விளம்பரப்படுத்திக் கொள்வர்.

ஆனால்

செயல்பட மாட்டார்கள்.

ஆனல் நீங்கள்

அமைதியாகச் செய்த புரட்சி

மிகவும் பாராட்டுதற்குரியது.