இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
17 0 முருகுகந்தரம் குண்டர்கள்:
திறந்துவிடு கதவை! இல்லையேல் வீட்டைத் தீக்கிரையாக்குவோம்.
(நொடிக்குள் காவல் அதிகாரியின் சீருடை அணிந்து கதவைத் திறக்கிறான் நெடுமுடி) நெடுமுடி:
யாரது வெளியே? என்ன கூட்டம்?
குண்டர்கள் திகைப்பு) குண்டர்கள்:
கள்வன் ஒருவன் இப்பக்கமாக. நெடுமுடி:
காவல் அதிகாரியின் வீட்டிலே கள்வனை நீங்கள் தேடுகின்றீர்கள்! குண்டர்கள்:
மன்னிக்க வேண்டும், ஐயா! வருகிறோம்.
(குண்டர்கள் கலைந்து செல்கின்றனர். செய்வதறியாது திகைத்த நெடுமுடி சற்று நேரம் அமைதியாகச் சிந்திக்கிறான். பின்னர் கதவை மெதுவாகத் தட்டி.) நெடுமுடி:
குண்டர்கள் சென்றனர். கோதையே வெளியில் வா!
(வளையிலிருந்து எட்டிப்பார்க்கும் எலிக்குஞ்சுபோல அவள் கதவைத் திறந்து எட்டிப்பார்க்கிறாள். நடுக்கம் அவளை இன்னும் விடவில்லை)