இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 22 காட்சி 2
இடம் : தில்லி. நெடுமுடி இல்லம்
நேரம் : காலை உறுப்பினர் : நெடுமுடி, அம்ரிதா, சலிம்
காலை ஏழுமணியாகியும் மெல்லிய வெள்ளை மஸ்லின் துணிபோல் எங்கும் பனிமூட்டம், கூடத்தில் கிடந்த சோப்ாவில், நெடுமுடி தன்கால்கள் கீழே தொங்கப்படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான். திடீரென்று அழைப்பு மணியின் ஒசை. மெல்லச் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து கதவைத் திறக்கிறான் நெடுமுடி. சலீம்:
சலாம் சாப்!
நெடுமுடி:
சலாம்.
சலீம்:
என்ன சாப்!
இவ்வளவு நேரம் தூக்கம்?
விடியற் காலையில்
எழுந்து விடுவீர்களே!
நெடுமுடி:
குண்டர்கள் கலவரம்! நடுவில் ஓயாமல் குண்டு வெடிப்பு! கூக்குரல்! அழுகை! தூக்கம் வருமா?
சலீம்:
ஆமாம் சாப்! தெருவெங்கும் கருகிய சீக்கியர் பிணங்கள்.