இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
25 0 முருகுசுந்தரம்
காட்சி 3
இடம் : தில்லி- நெடுமுடி இல்லம். நேரம் : இளங்காலை
உறுப்பினர் : நெடுமுடி, அம்ரிதா, சலீம் 球 G、 அம்ரிதா சோகமே உருவாக நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். நெடுமுடி அவள் எதிரில் அமர்ந்து இதமானசொற்களால் அவள் இதயப் புண்ணை ஆற்ற முற்படுகிறாள். நெடுமுடி: ,
இரண்டு நாட்களாக
இமைகளை நீ
மூடியதாகத் தெரியவில்லை. அம்ரிதா:
கண்ணி வெள்ளம்
கரையை உடைக்கும்போது
இமைக் கதவம்
திறந்து தானே இருக்கும்! நெடுமுடி:
கஜரண்டு ஒடும் வெள்ளத்தை
எதிர்த்துநீந்திக்
கரையேறுவது தான் வெற்றி.
வாழ்க்கைவசந்த மென்றால்
அதை- -
மலர் தூவிவரவேற்க வேண்டும்.
வாழ்க்கை போராட்டமென்றால்
அதை-வாளோடுதான்
எதிர்கொள்ளவேண்டும்,
அழுகை
வாழ்க்கைப்படகில்
ஏற்படும் கசிவு
அதை அடைக்காவிட்டால்
படகே மூழ்கி விடலாம்.