பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 0 முருகுசுந்தரம்

காட்சி 3

இடம் : தில்லி- நெடுமுடி இல்லம். நேரம் : இளங்காலை

உறுப்பினர் : நெடுமுடி, அம்ரிதா, சலீம் 球 G、 அம்ரிதா சோகமே உருவாக நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். நெடுமுடி அவள் எதிரில் அமர்ந்து இதமானசொற்களால் அவள் இதயப் புண்ணை ஆற்ற முற்படுகிறாள். நெடுமுடி: ,

இரண்டு நாட்களாக

இமைகளை நீ

மூடியதாகத் தெரியவில்லை. அம்ரிதா:

கண்ணி வெள்ளம்

கரையை உடைக்கும்போது

இமைக் கதவம்

திறந்து தானே இருக்கும்! நெடுமுடி:

கஜரண்டு ஒடும் வெள்ளத்தை

எதிர்த்துநீந்திக்

கரையேறுவது தான் வெற்றி.

வாழ்க்கைவசந்த மென்றால்

அதை- -

மலர் தூவிவரவேற்க வேண்டும்.

வாழ்க்கை போராட்டமென்றால்

அதை-வாளோடுதான்

எதிர்கொள்ளவேண்டும்,

அழுகை

வாழ்க்கைப்படகில்

ஏற்படும் கசிவு

அதை அடைக்காவிட்டால்

படகே மூழ்கி விடலாம்.