இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
35 0 முருகுகந்தரம் காட்சி 5
இடம் : நூலகத்துக்கு எதிரில் உள்ள புல்வெளி நேரம் : மாலை உறுப்பினர் : சொற்கோ, இந்திரஜித், வீணா, தோகை
சொற்கோ, இந்திரஜித், வீணா, தோகை நால்வரும் புல் வெளியில் அமர்ந்திருக்கின்றனர். எதிரில் உள்ள கைவானொலி நேயர் விருப்பங்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது; புல் வெளியின் நடுவில் இருந்து புறப்பட்டு மேலே எழும்பிப் பூவாகச் சிதறும் தண்ணின் வேடிக்கையை வீணாவும், தோகையும் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர். சொற்கோ:
மயிலைவிட
வான் கோழி தான்
சிறகை
வேகமாக அடித்துக் கொள்ளும், இந்திரஜித்,
என்ன?
திடீரென்று
தத்துவத்தில் இறங்கிவிட்டாய்? சொற்கோ:
அழகில்லாத பெண்களும்
காதலில் தோல்வியடைந்து
கசப்பான அனுபவங்களைப்பெற்ற
கன்னியரும்
பெண்ணுரிமைபற்றி
உரக்கப் பேசுவர்.
வீணா:
குதர்க்கம் பேசாதீர்கள் சொற்கோ:
இதில் குதர்க்கம்
என்ன இருக்கிறது?