இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
37 0 முருகுகந்தரம்
அவரைப்பற்றிய எல்லாச் செய்திகளும் எனக்குத் தெரியும்.
வீன:
என்ன தெரியும்?
சொற்கோ:
அவர் காதலித்தது: காதலில் தோல்வியுற்றது எலலாம,
(எல்லாரும் வியப்போடு பார்க்கின்றனர்)
முற்றிய இலையே அழகாக இருக்கிறதென்றால் அது தளிராக இருக்கும் போது எப்படி இருந்திருக்கும்? பேராசிரியர் மேகலை இப்போதே அழகி. அவர்கல்லூரி மாணவியாக இருந்தபோது எப்படி இருந்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். கல்லூரி ஜூலியட், என்று அவருக்குப் பெயர், ஆங்கிலப்பேராசிரியர் ஆனந்தனும் அவரும் காதலித்து அக்காதல்பிறையாக வளர்ந்து நிலவாக முதிர்ந்து நிச்சயதார்த்தம் வரையில் சென்றுவிட்டது.
எல்லாரும்:
அப்படியா? பிறகு ஏன் திருமணம் நடைபெறவில்லை?