இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 58
நெடுமுடி:
கொங்கு நாட்டில் பூவானி ஆற்றங்கரை எங்கள் குடியிருப்பு எழுநூறு ஆண்டுகளுக்குமுன் எங்கள மூதாதை காலிங்கராயன் என்பவன் வெட்டிய வாய்க்கால் ஒன்று அவன் பெயரால் இன்றும் இருக்கிறது ஒருவனநிறுவிய அறக்கட்டளையில் அவன் வழிவந்தவர்கள் பங்கு கேட்கக் கூடாது,
அம்ரிதா:
உண்மைதான்!
நெடுமுடி:
இந்த எழுநூறு ஆண்டுகளாக எங்கள் மூதாதையின்
அக்கால்வாய் நீரை நாங்கள் குடிப்பது மில்லை பாசனத்துக்கும் பயன்படுத்துவதில்லை,
அம்ரிதா:
வியப்பாக இருக்கிறதே.
நெடுமுடி:
நாணயத்துக்கும் நம்பிக்கைக்கும் இஃதோர் உரைகல்