இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோறு அளித்த சேரன்
27
நடைபெறும் ஒழுக்கம் வேறுபட்டாலும் வேறுபாடு இல்லாத ஆலோசனையைப் பெற்ற மந்திரிகளோடு நெடுங்காலம் விளங்கி, மலைச் சாரலில் குட்டிகளோடு பெரிய கண்ணையுடைய பெண்மான்கள் அந்திக் காலத்தில் அந்தணர் செய்யும் கடனாகிய ஓமத்தைச் செய்யும் முத்தியாகிய விளக்கிற்கு அருகில் துயிலும் பொற் சிகரங்களையுடைய இமய மலையையும், பொதிய மலையையும்போல நடுக்கம் இல்லாமல் வாழ்வாயாக!)