பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலக்கமும் தெளிவும்

35

 வாறே சொல்லாமல் புதிய புதிய விதமாகச் சொல்ல முனைந்தனர். அவனுடைய வீரச் செயல்களும், அறச் செயல்களும் பல என்பதை யாவரும் உணர்வர். அவற்றை ஒவ்வொன்றாக அடுக்கிச் சொன்னாலே ஆயிரம் பாட்டாகும். அது போதுமா ? கருத்தைச் சொல்வது பெரிதல்ல; அதைச் சொல்லும் தோரணை தான் பெரிது. அந்தத் தோரணையிலே நயமும் சுவையும் இருக்கவேண்டும். கவிஞனுடைய ஆற்றல் சிறப்பாக இருந்தால், எத்தனை தடவை ஒரே கருத்தைச் சொல்வதாக இருந்தாலும் வெவ்வேறு அழகோடு சொல்ல முடியும்.

காரிகிழார் அத்தகைய ஆற்றலுள்ள புலவர். முதுகுடுமியின் புகழ் எங்கும் பரவியிருப்பதை நன்றாக உணர்ந்தவர். அவன் புகழைத் தெரிந்தவர்கள் அவனுடைய பாராட்டில் இன்பம் காணலாம். அவன் புகழை அறியாதவர்கள் கூடப் பாட்டின் இனிமையிலே ஆழவேண்டுமென்று அவர் நினைத்தார்.

முதுகுடுமி தெய்வ பக்தியிலே சிறந்தவன். முக்கட்பிரானுகிய சிவபெருமானிடம் உறுதியான அன்பு பூண்டவன். அப் பிரானது திருக்கோயிலை வலஞ் செய்யும் வழக்கம் உடையவன். வேத வேள்வியினிடம் நம்பிக்கை உடையவன். எரியோம்பும் அந்தணர்களை வணங்குபவன். அவர்களுடைய ஆசியை விரும்புகிறவன். வீரத்திலோ, அவன் செயலை அளவிட்டுச் சொல்ல முடியாது. அவனுடைய ஆணைக்கு அடங்க மறுத்த நாடுகள் என்ன ஆயின, தெரியுமா? தீக்கடவுளின் ஆட்சியை அங்கே நிறுத்தும் கொடுஞ்சினத்தை உடையவன் அவன். வீரம் உள்ள இடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/43&oldid=1529180" இலிருந்து மீள்விக்கப்பட்டது