இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54
எல்லாம் தமிழ்
நம்முடைய விருப்பப்படி பெய்யாது. நீரைத் தேக்கினவர்களே புகழைத் தேக்குவார்." இந்தப் பொன்னான வாக்கியங்கள் ஒவ்வொன்ருக அவன் உள்ளத்தில் கணீர் கணீர் என்று மணியடிப்பதுபோல் மீட்டும் ஒலித்தன.
"புலவர் பெருமானே, நானும் நீரைத் தேக்கிப் புகழைத் தேக்க முயல்வேன்' என்ற வார்த்தைகள் அரசன் வாயிலிருந்து வந்தபோது, அங்கிருந்த அமைச்சர்களின் முகங்கள் என்றும் இல்லாத மலர்ச்சியைப் பெற்றன.