பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

எல்லாம் தமிழ்


தாலே போதும். அதன் இசையைக் கேட்கத் தொடங்கிளுல் பிறகு அதனினின்றும் மீள்வதென்பது தேவர்க்கும் அரிய செயல். இசையோடு போகுமா ? அது பாடும் ; ஆடும் , ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும்."

பாணனுடைய வருணனை இல்லத் தலைவனுடைய ஆர்வத் தீயை விறகிட்டும் நெய்யிட்டும் மூட்டியது. மெல்ல மெல்லப் பாணன் தலைவனைப் பரத்தையர் சேரிக்கு அழைத்துச் சென்றான். முதலில் இசை நயம் காமுற்றுத்தான் சென்றான் அவ்வாடவன் ; ஒரு பரத்தையின் இசையிலே ஈடுபட்டான். அப்பால் அவளுடைய ஆடல் அவனை ஆட்கொண்டது. இறுதியில் அவளுடைய அழகைக் கண்டு மயங்கினான். படிப்படியாகத் தலைவன் தன் மனவலியை இழந்தான். அவன் தன் வீட்டிலே இருந்தால் தன் நிறையை இழந்திருக்க மாட்டான். விரகெலாம் அறிந்த பாணன் இசை ஆவலை அவன்பால் எழுப்பிப் பரத்தையர் சேரிக்கே அவனை அழைத்துச் சென்றுவிட்டான். அதற்குமேல் அவனுடைய சாமர்த்தியம் பலிக்கத் தொடங்கியது. இசையும் கூத்தும் அழகும் பேச்சும் மனவலி படைத்த தலைவனைக் காமச் சுழலுக்குள் இழுத்துச் சென்று ஆழ்த்திவிட்டன.

2

இங்கே மனைத்தலைவி எப்போதும்போல் இல்லற ஒழுக்கங்களை முறைப்படி செய்துவந்தாள். கணவன் பரத்தையர் வலையிலே சிக்கினானென்பது அவளுக்குத் தெரியும். கற்புக்கு அருங்கலமாகிய அவள் அதனால் சிறிதும் மன வேறுபாடு அடையவில்லை. அவனிடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/64&oldid=1529419" இலிருந்து மீள்விக்கப்பட்டது