பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 எல்லாம் தமிழ்

                    புலவர் இட்ட சாபம்

கதிரவன் இன்னும் வானத்தில் எழவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அவன் தன் செங்கதிர்களைப் பரப்பி உலகத்தில் பவனி வரப் புறப்பட்டுவிடுவான். உலகம் விழித்துக்கொண்டது. இயற்கைத் தேவி மலராலும் புள்ளினங்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தாலும் கதிரவனை வரவேற்க ஆயத்தமாக இருக்கிறாள். புல்லுக்கும் பூவுக்கும், மரத்துக்கும், மண்ணுக்கும், புனலுக்கும் புள்ளினத்துக்கும் பொலிவு தரும் நாயகன் அல்லவா அவன்? மக்கள் அனைவரும் துயில் நீங்கி வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க முனையப் போகின்றனர். ஆடவரும் மகளிரும் நீராடி இறைவனை வழிப்பட்டு இல்லற ஒழுக்கங்களில் ஈடுபடப் போகின்றனர்.

அந்த மடமங்கையும் என்றும்போல அன்றும் எழுந்தாள். ஆற்றுக்கு நீராடச் சென்றாள். குடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மென்கொடி அலசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/9&oldid=1472387" இலிருந்து மீள்விக்கப்பட்டது