இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
90
எல்லாம் தமிழ்
சொன்னார். அந்த யானைகளின் விஷயத்தைப் பரதேசி அம்பலப்படுத்தினார்.
மாநிலத்தில் காய்கிழங்கு
வற்றலுண்டு செந்தூரில் - இரண்டு
ஆனைவற்றல் ஆனதென்ன
ஐயா குருபரனே !
இந்த மூன்றாவது கண்ணி மற்ற இரண்டையும்விட அதிகமாகச் செந்தூரின் நிலையைக் காட்டியது. ஜனங்கள் தம்மை அறியாமலே தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அதிகாரி வந்த காரியம் நிறைவேறிவிட்டது. பரதேசியின் உபாயம் பலித்தது. அவர் குறைகளை உணர்ந்து கொண்டார். பிறகு-? அதையுமா சொல்ல வேண்டும்?