பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

எல்லாம் தமிழ்


சொன்னார். அந்த யானைகளின் விஷயத்தைப் பரதேசி அம்பலப்படுத்தினார்.

      மாநிலத்தில் காய்கிழங்கு
           வற்றலுண்டு செந்தூரில் - இரண்டு
      ஆனைவற்றல் ஆனதென்ன
           ஐயா குருபரனே !

இந்த மூன்றாவது கண்ணி மற்ற இரண்டையும்விட அதிகமாகச் செந்தூரின் நிலையைக் காட்டியது. ஜனங்கள் தம்மை அறியாமலே தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அதிகாரி வந்த காரியம் நிறைவேறிவிட்டது. பரதேசியின் உபாயம் பலித்தது. அவர் குறைகளை உணர்ந்து கொண்டார். பிறகு-? அதையுமா சொல்ல வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/98&oldid=1529826" இலிருந்து மீள்விக்கப்பட்டது