பக்கம்:எழிலோவியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
3

சுவரைச் சுவர்மேல் தாவிப்
படிந்திட்ட கொண்டல் வான
விசும்பினில் எழுந்த தீயின்
மென்புகை ! எருமை ! பாறை !
திசையெலாம் அழகின் வீச்சு !
செடியெலாம் புள்ளின் பாட்டாம்!
இசையினுக் கேற்பக் கல்லின்
இடுக்கில்பாய் அருவி ஆர்க்கும்!

4

யிரம் வண்ணம் காட்டும்
அடிவான முகில்கள் ஓடிப்
பாய்கதிர் ஒளிம றைக்கும்!
பலமலை குன்றைச் சுற்றிப்
போய்விழும் ஓடை போலத்
தோன்றிடும்; புது வெள்ளத்தில்
மாய்கதிர் செக்கர் வானம்
எழிலோவி யம்பார் தம்பி!

5

ளிமயில் அகவும்: புள்ளிக்
கருங்குயில் பாட்டி சைக்கும்;
விளித்திடும் துணை பிரிந்த
புள்ளினம்; விளாமரத்தில்
ஒளித்துண்ணும் அணிலோ,கிள்ளை
ஒளிமூக்கை மிளகா யென்று
களித்துண்ணப் பாயும்; காட்டில்
காண்எழில் ஓவி யத்தை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/15&oldid=1301702" இலிருந்து மீள்விக்கப்பட்டது